Tuesday, December 27, 2011

பேராசிரியர் சிவத்தம்பி ஓர் அறிமுகம்

சிவத்தம்பி கரவட்டியில் பிறந்தவர் 

இலங்கையில் பிறந்த தமிழ் பேராசிரியர்களான விபுலானந்தஅடிகள், க. கனபதிப்பிள்ளை, வி. செல்வ நாயகம், சு வித்தியானந்தன், சீ. கணபதிப்பிள்ளை, க. கைலாசபதி வரிசையில் சிவத்தம்பி அவர்களுக்கு தனித்துவமான ஓர் இடமுண்டு சிவத்தம்பி தான் வாழும் போது தமிழ் துறையை மாத்திரம் சார்ந்த ஓர் பேராசிரியர் அல்லாமல் பல துறைகளையும் சார்ந்த பேராசிரியராக இருந்தார் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். எனது பேராசிரியர் சந்திர சேகரன் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் பேராசிரியருடைய அறிவுக் புலமையைப் பற்றி எங்களுடைய உரையாடல் தொடரும் சந்திர சேகரன் பேராசிரியர் சிவத்தம்பி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததை யான் நேரில் கண்டு வியந்திருக்கின்றேன். சந்திர சேகரன் சிவத்தம்பி அவர்களைப் பற்றி எழுதுமாறு எனக்கு ஆலோசனை வழங்கினார் அதன் பயனாக போராசிரியர் சிவத்தம்பி அவர்கள் எழுதிய நூல்கள் பின்வருமாறு. 

1. மார்க்கான்டன் வாழ்வெனும் நாடகம்
2. ஜரோப்பிய வரலாற்றுச் சுருக்கம் 
3. தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் 
4. வலவை வைத்தியலிங்கம் பிள்ளை 
5. இலங்கை தமிழ் இலக்கியம் 
6. நாவலும் வாழ்க்கையும் 
7. இலக்கியத்தில் முற்போக்குவாதம் 
8. தனித் தமிழியக்கத்தின் அரசியல் பின்னனி 
9. இலங்கை தமிழ் நாட்டார் வழக்கியல் 
10. இலக்கியமும் கருத்து நிலையும் 
11. இலக்கணமும் சமூக உறவுகளும் 
12. தற்கால தமிழ் இலக்கியத்தில் வறுமையும், சாத்தியமும் 
13. தமிழ் சமூகமும் அதன் சினிமாவும் 
14. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும் 
15. பாரதி மறைவு முதல் மகாகவி வரை 
16. தமிழில் இலக்கிய வரலாறு 
17. தமிழ் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு 
18. பண்பாட்டு உருவாக்கங்களில் பதிப்பகங்களின் பங்கு 
19. யாழ்ப்பாணத்தில் தொடர்பும்; பண்பாடும் 
20. யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 
21.Tamil translation of a Memory of solferino by a Henri Duinant, for the international Red Cross 
22. தமிழ் கற்பித்தலில் உன்னதம்
23. இலங்கை மலையக தமிழர் பண்பாடும் கருத்து நிலையும் 
24. தமிழ் பண்பாட்டில் கிறிஸ்தவம் 
25. ஒரு யானைக்கு துணிவு பிறக்கிறது. 
26. தமிழ் சமூகமும் அதன் மீள் கண்டுபிடிப்பும் 
27. யாழ்ப்பாணத்தில் புலமைத்துவ மரபு
28. கற்கை நெறியாக அரங்கு 
29. பேராசிரியர் கணபதிப்பிள்ளை 
30. புராண நூலிலிருந்து புதுக்கவிதை வரை 
31. அரங்கு 
32. திராவிட கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு 
33. மதமும் கவிதையும் 
34. யாழ்ப்பாண சமூகம் 
35. இலங்கையில் தமிழர் யார் எவர்? 
36.The Tamil Film as a Medium of Political Communication 
37. Drama in Ancient Tamil Society 
38. Literary History in Tamil 
39. Chapter in Tamil 
40. introduction to the Reprint of Vaiyapuripillai
41. Chapter on American socio – cultural impact in Jappna Tamil Society 
42. Chapter on Tamil militants in Sri Lanka in 
43. Tamil Nationalism and social conflicts
44. Sri Lanka Tamil Society and its politics 
45. Understanding the Dravidian Movement 
46. Studies in Ancient Tamil Society 
47. நவீனத்துவம், தமிழ், பின் நவீனத்தவம் 
48. பண்டைச் தமிழ் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி 
49. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் தொகுதி 1 
50. சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும் 
51. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா 
52. Being a Tamil and a Sri Lanka 
53. இலக்கியமும் வாழ்க்கையும் 
54. பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம் 
55. தமிழ் கற்பித்தல் 
56. தமிழின் கவிதையியல் 
57. தமிழர் கலைகள் தொகுப்பு 
58. ஈழத்தின் தமிழிலக்கிய சுடர் மணிகள் 
59. பேராசிரியர் சிவத்தம்பி நேர்காணல்கள் ( ஞானம் சஞ்சிகை வெளியீடு )
60. தமிழ் சமூகத்தில் நாடகம் 
61. தமிழ் கவிதைப் பாரம்பரியம் 

பேராசிரியரின் நூல்களை வாசிக்கும் போது அவருடைய அறிவுப் புலமையை, பண்முகப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், வி. செல்வநாயகம், ஜோர்ஜ் தோம்சன் ( கிரேக்க பேராசிரியர் ) இவர்களுடைய அன்புக்குரிய மாணவனாக இருந்தார் என்பதே வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் 2000 மாம் ஆண்டு வி. க. விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதே போன்று இலங்கையிலும் பல விருதுகளை பெற்றிறுக்கின்றார். எனது வாசிப்புத் துறையில் பேராசிரியரின் பங்கு மிக மிக கணிசமானது. அவருடைய பண்புகளால் யான் வெகுவாக கவரப்பட்டுள்ளேன். வீட்டுக்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை படைத்தவர் தன்னை முதன்மைப்படுத்தாவர். மற்றவர்களை முன்னிலைப்படுத்துபவர் இவருடைய பணிகளும் பங்களிப்புக்களும் மிக மிக கணிசமானவை தமிழ் உலகம் என்றென்றும்; நன்றியுடன் வரலாற்றில் பதிவு செய்யும். பேராசிரியர் கைலாசபதிக்குப்பின்னர் பேராசிரியர் சிவத்தம்பி தமிழ் துறையில் மிக முக்கியமான பேராசிரியராக உலகம் போற்றும் தமிழ் அறிஞராக வாழ்ந்தார். சிவதம்பி அவர்கள் கானும் போதல்லாம் யானும் அவ்வாறே வரவேண்டும் என அடிக்கடி சிந்திப்பதுதுண்டு அதுவே எனது இலட்சிய வேட்கையும் பிரார்த்தனையும் ஆகும்.

No comments:

Post a Comment